மக்களை தேடி மருத்துவம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Tamilnadu CM MK Stalin

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெற்றுள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . 

தமிழகத்தில் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், டயலாசிஸ் போன்ற நோய்களை தடுக்க மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டம் 2021இல் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டது.  இந்த திட்டத்தில் களப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு தேவையான மருத்தவ உதவிகளை வீடுகளுக்கே நேரடியாக சென்று செய்து வருகின்றனர்.

இந்த திட்டம் பற்றி இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில் , மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ செலவை பாதியாக குறைத்துள்ளது எனவும்,  கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் திராவிட மாடல் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நிறைவடைந்து உள்ளது. அதில் வரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பேச வேண்டிய கருத்துக்கள் குறித்து ஆலோசித்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்