அமைச்சர் பொன்முடி மகன் கெளதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

Gautama Sigamani

சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி திமுக எம்பி கெளதம சிகாமணியிடம் அதிகாரிகள் விசாரணை.

அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கெளதம சிகாமணி சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.  சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ள கெளதம சிகாமணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று திமுக எம்பி கெளதம சிகாமணியிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.

2006-2011 காலகட்டத்தில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது வானூர் அருகே பூத்துறையில் அதிக அளவு செம்மண் எடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதுபோன்று அமைச்சரின் மகன் கெளதம சிகாமணி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் பொன்முடியிடம் கடந்த இரு தினங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதன்பின் சோதனை குறித்த தகவலை அமலாக்கத்துறை தனது ட்விட்டரில் வெளியிட்டது. அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி இவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.81.7 லட்சம் பணமும், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் (பிரிட்டிஷ் பவுண்ட்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கபட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies