தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!
செம்பனார்கோவில் அருகே காரில் வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் நடந்த கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்று திரும்பியபோது மணிமாறன் என்பவர் செம்பனார்கோவில் அருகே தனியார் பள்ளி முன் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
மணிமாறன் 2022ஆம் ஆண்டு நடந்த பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவர். இதன் பின்னணியாக மணிமாறன் இன்று மயிலாடுதுறை செம்மினார்கோவிலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.