சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் வகையில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா நான்கு கட்டங்களாக நடைபெற்று இன்று நிறைவடைந்தது. மாணவர்களின் கல்வி சாதனைகளை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் […]
சென்னை : ஜாக்டோ-ஜியோ அமைப்பு, பல ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது. சமீபத்தில், ஜாக்டோ-ஜியோவின் ஒரு நிர்வாகியான மாயவன் என்பவர் விஜய்யை சந்தித்ததாகவும், அவர்கள் அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரியதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகின. ஆனால், ஜாக்டோ-ஜியோ அமைப்பு இதை மறுத்து, விஜய்யுடன் எந்த சம்பந்தமும் இல்லை என்று […]
சென்னை : தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் இறுதிகட்ட நிகழ்வில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்று பரிசுகளை வழங்கி வருகிறார். 4ஆம் கட்டமாக நடக்கும் நிகழ்வில் 39 தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு விஜய் பரிசளித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். மாணவி ராஜேஸ்வரி, ஜே.இ.இ (JEE) அட்வான்ஸ்ட் தேர்வில் அகில இந்திய அளவில் 417-வது இடத்தைப் பிடித்து, சென்னை ஐ.ஐ.டி-யில் […]
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் அவர் திமுக குறித்து பேசிவருவது குறித்தும் திமுகவை சேர்ந்த அமைச்சர்களிடம் கேள்விகளாக கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு காரில் இருந்தபடி பேட்டி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனே முதல்வர் ஆக முடியாது என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” 1949-இல் திமுக ஆரம்பிக்கப்பட்டபோது உடனே எல்லாம் யாரும் முதலமைச்சர் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதைப்போல அரசியலில் நிற்கவேண்டும் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை மூன்று கட்டங்களாக நடத்தி வருகிறார். இந்த ஆண்டு முதல் கட்ட விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட விழாவானது தற்போது மீண்டும் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த விழாவில், கலந்து கொண்ட பெண் ஒருவர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு […]
சென்னை : 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று 3ஆம் கட்டமாக பரிசு வழங்கிறார் தவெக தலைவர் விஜய். தமிழ்நாடு, புதுச்சேரியில் 51 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தவெகவின் 3-ம் கட்ட கல்வி விருது விழா சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. விழா தொடங்கியதும், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி […]
சென்னை : தேமுதிக கட்சியின் மண்டல பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும். கிளைக்கழகம் வரை நேரடியாக களத்திற்கு சென்று அனைவரும் பணியாற்ற வேண்டும்” பிரேமலதா கூறியுள்ளார். மேலும், ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், திமுக முன்னாள் MLA டேவிட் செல்வன், அதிமுக முன்னாள் MLA ராஜலட்சுமி, ஸ்ரீதரன் ஆகியோர் த.வெ.கவில் இணைந்தனர். இது தவிர ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளைத் தலைவர் மரிய வில்சன் ஆகியோரும் இணைந்தனர். இவர்கள் கட்சியில் இணைந்தது குறித்து அக்கட்சியின் தவெக தலைவர் […]
கோவை : தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நயினார் நாகேந்திரன், திமுக அரசை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த ஆண்டு மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த விழாவின் முதல் கட்டம் மாமல்லபுரத்தில் மே 30 அன்று நடைபெற்றது, அங்கு 88 தொகுதிகளைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, ஜூன் 4 (இன்று) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் விழாவில், […]
சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும் கட்சி தொண்டர்களும் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், விஜய் முழு நேர அரசியலில் இறங்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன, இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியலுக்கு வந்தவுடன் எழுந்த விமர்சனங்களில் இதுவும் ஒன்று. பலரும் விஜய் எதாவது விவாகரத்துக்கு கண்டனம் தெரிவித்தால் முதலில் முழுவதுமாக அரசியல் களத்திற்கு வரட்டும் அதன்பிறகு பேசலாம் […]
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறியது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆதவ் அர்ஜூனா […]
சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய், அஞ்சலை அம்மாளை கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அறிவித்தார். இந்த நிலையில், அவரது பிறந்தநாளான இன்று (ஜூன் 1) தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலை அம்மாளின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். […]
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் குறிப்பிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறியது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் அவரது பதிவில், ”எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் […]
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று வருகிறது.10, 12-ம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், ”உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள். அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதன்படி வழிநடத்துங்கள் என்று பெற்றோருக்கு […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் கல்வி சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு சென்னை மாமல்லபுரத்தில் […]
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதேபோன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் பாராட்டும் விழா, இன்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த விழா காலை 10 மணிக்கு […]
சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் நேரில் சென்று அங்கிருந்தவர்களுக்கு உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் […]
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர். இதில், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் வெடித்திருக்கிறது. ஏனென்றால், அரசியல் தலைவர்கள் பலரும் முதல்வர் சென்றது பற்றி விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். குறிப்பாக த.வெ.க தலைவர் […]
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில கோரிக்கைகளை முன் வைத்து இருந்தார். இந்த சூழலில், அமலாக்கத் துறை நடவடிக்கை. காலைச் சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ரூ.1000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் டெல்லி சென்றதாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து அவர் […]