முதன்முதலாக திருநங்கைகளின் பிறப்புச் சான்றிதழ் வழங்கியது ராஜஸ்தான்..!

ராஜஸ்தானில் முதன்முறையாக ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் திருநங்கை ஒருவருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தலைமைப் பதிவாளர் பன்வர்லால் பைர்வா, முதல் திருநங்கையின் பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு வழங்கினார்.
மேலும், ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்றும் திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்றும் பன்வர்லால் பைர்வா கூறினார்.