இந்தியாவின் திறமையை உலகமே உற்று நோக்குகிறது..! பிரதமர் மோடி

இந்தியாவின் திறமையை உலகமே உற்று நோக்குகிறது எனக் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இன்று காலை 10:30 மணி அளவில் நாடு முழுவதும் 44 இடங்களில் ரோஸ்கர் மேளா நடைபெற்றது. இந்த விழாவில் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். இதன்பின் உரையாற்றிய அவர், இந்தியாவின் திறமையை உலகம் கண்காணித்து வருவதாக கூறினார்.
மேலும், இந்திய இளைஞர்கள் தங்கள் திறமைகளையும், திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும் திறன் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
பிறகு, பணி நியமனம் பெற்றவர்களிடம் உரையாற்றி அவர்களை வாழ்த்தினார். ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசு துறைகளில் 10,00,000 பேருக்கு வேலை வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த திட்டத்தின் கீழ், 4,30,000 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.