ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என அறிவிப்பு.
சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும், இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 26 ரயில் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணி நடைபெறுகிறது என என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.