அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருப்பது மிக மோசமான ஏமாற்று வேலை..! – அதிமுக

AIADMK Chief Secretary Edapadi Palanisamy

நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசு தான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மணிப்பூர் விவகாரம் பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்காதது அவர்கள் இரட்டை வேடத்தை காட்டுகிறது.எ மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் அமைதி காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இது குறித்து அதிமுக தரப்பில் மணிப்பூர் சம்பவத்திற்கு நேற்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்த செய்தியை பதிவிட்டு, அதிமுக ட்விட்டர் பக்கத்தில், இந்த விடியா முதல்வரின்’ ஆட்சியில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் பொய் பிரச்சாரம் செய்ய தயங்குவதில்லை ,மணிப்பூர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நேற்றே தனது கடும் கண்டனங்களை தெரிவித்துவிட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் மணிப்பூர் குறித்து பேசவே இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு, கூறி இருப்பது மிக மோசமான ஏமாற்று வேலை ! இந்த சமுகவலைதள யுகத்தில் கோமாளித்தனமானதும் கூட…!

நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசு தான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி! அது சரி…, மணிப்பூர் குறித்து கழக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினாரா என கேள்வி கேட்பவர்கள், மேகதாது அணை கட்ட ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையோ , தன் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ்ந்து குலாவிய டி.கே.சிவகுமாருக்கு எதிராகவோ இதுவரை வாய்திறக்காதது ஏன் என்று கேள்வி கேட்பார்களா ?’ என  பதிவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்