இது சர்வாதிகார ஆட்சி இல்ல…! கொடுங்கோல் ஆட்சி – சீமான்

Seeman manpr

ராகுல் காந்திக்கு திடீரென மணிப்பூர் மீது பற்று வந்துள்ளது. ஏன் வந்தது என்றால் தேர்தல் வருகிறது என சீமான் பேட்டி. 

பூந்தமல்லியில் நாம் தமிழர் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் பேசுகையில், மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டது போல பல சம்பவங்கள் நடந்ததால் தான், அது வெளியில் தெரியக்கூடாது என்பதால் இணையதளத்தை முடக்கினோம் என்கிறார் மணிப்பூர் முதல்வர்.

அவர்கள் நினைத்தால், 10 நொடியில் கலவரத்தை நிறுத்தலாம். இவ்வளவு பெரிய ராணுவத்தை வைத்திருக்கிற இந்தியா, படக்-னு மணிப்பூர் கலவரத்தை நிறுத்தி இருக்கலாம். மத்தியிலும், அம்மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசு அந்த கலவரத்தை விரும்புகிறது. இது சர்வாதிகார ஆட்சி இல்ல. கொடுங்கோல் ஆட்சி. இன்று ராகுல் காந்திக்கு திடீரென மணிப்பூர் மீது பற்று வந்துள்ளது. ஏன் வந்தது என்றால் தேர்தல் வருகிறது. என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்