உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்யுங்கள்..! யுனெஸ்கோ

BanSmartPhones

உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்ய வேண்டும் என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) கற்றலை மேம்படுத்தவும் மற்றும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

பள்ளியில் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கல்வி செயல்திறன் குறைவதற்கும், வகுப்பறையில் மோசமான செயல்திறனுக்கு வழிவகுக்கிறது எனக் கூறிய யுனெஸ்கோ, தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது

மேலும், பல நாடுகள் ஏற்கனவே பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்துள்ளன. 2018ம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை தடை செய்த நாடுகளில் பிரான்ஸ் முதன்மையாக உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த மாதம் நெதர்லாந்து பள்ளிகளில் ஸ்மார்ட்போன் தடையை அறிவித்தது. இது 2024 இல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்