#EDRaids: PFI அமைப்பின் முன்னாள் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Enforcement Directorate Logo

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய, 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் இஸ்மாயில் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள இஸ்மாயில் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வேப்பேரியில் உள்ள வழக்கறிஞர் வீட்டிலும், பெரம்பூரில் இஸ்மாயில் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்