செப்.9-ம் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனை – புஸ்ஸி ஆனந்து அறிவிப்பு

செப்.9-ம் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனை நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி இயக்கமாக வேகமாக உருவெடுத்து வருகிறது. வரும் தேர்தலிலேயே களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில், அந்த அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
அந்தவகையில் சமீபத்தில் தொடர்ந்து பல்வேறு அணிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சமயத்தில், சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில், மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செப்.9-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட மகளிர் அணி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டார். சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வரும்..இபிஎஸ் பேச்சு!
June 8, 2025