Libya Floods: லிபியா வெள்ளப்பெருக்கு – பலி எண்ணிக்கை 20,000ஐ கடந்தது!

லிபியாவின் டேர்னா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய டேனியல் புயலால் 2 அணைகள் மற்றும் 4 பாலங்கள் இடிந்து விழுந்தது. இதனால், நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
முதலில் 5,100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், கடலோர துறைமுக நகரமான டெர்னாவின் மேயர், 18,000 முதல் 20,000 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இன்னும், ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
டெர்னாவிற்கு வெளியே இடிந்து விழுந்த அணைகள் 1970 களில் கட்டப்பட்டவை என்றும், அவை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது.