ஐயோ!! திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.! அப்செட்டில் இல்லத்தரசிகள்…

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பெண்கள் கூட்டம் கூட்டமாக நகை வாங்க செல்கின்றனர்.
அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கடந்த 4 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென்று சரிந்து வந்தது. இந்த நிலையில், இன்று சென்னையில் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதனால், நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
அதன்படி, சென்னையில் (10.11.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து கிராமுக்கு ரூ.5,645க்கும், சவரன் ரூ.45,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77க்கும், ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனையாகிறது.
(09.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,615க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.76.20க்கும் கிலோவுக்கு ரூ.76,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025