”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவர் கமேனிக்கு ஏற்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகம் இருக்கும் இடமும் ஒன்று என வீடியோவை வெளியிட்டு ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொலை செய்ய போவதாக மிரட்டினார். கமேனி கொல்லப்பட்ட பின்னரே இந்தப் போர் நிற்கும் என்று அவர் கூறினார். இது சம்பந்தமாக கமேனியைக் கொல்ல இஸ்ரேல் ஒரு பெரிய திட்டத்தை போட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் கடைசி நேரத்தில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் இஸ்ரேலின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. இதையடுத்து, ஈராக்கின் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதி தான் ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் ஏற்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று எச்சரித்துள்ளார்.
சதாம் உசேன் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனைக்கு விதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, சதாமின் ஒன்றுவிட்ட சகோதரர் (உளவுத்துறை அதிகாரி) மற்றும் ஈராக்கின் முன்னாள் தலைமை நீதிபதி ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2006 இல் ஈராக் நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்த சில நாட்களுக்குப் பிறகு, சதாம் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025