தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இந்த தாக்குதல்களுக்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக ஈரானின் அரசு ஊடகமான தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக […]
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம்,” என்று அறிவித்துள்ளது. ஈரானின் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமன் தனது கடல் எல்லைப் பகுதியான சிவப்புக் கடல் மற்றும் பாப் அல்-மண்டப் நீரிணையில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. […]
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியுள்ளன. அமெரிக்க செனட் சபையின் முன்னாள் பெரும்பான்மைத் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினருமான சக் ஷூமர், “அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி ஈரானை தாக்கியதற்கு டொனால்ட் டிரம்ப் பதில் அளிக்க வேண்டும்,” என்று கடுமையாக விமர்சித்தார். இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேல்-ஈரான் மோதலின்10-வது நாளில், அமெரிக்கா முதல் முறையாக நேரடியாக களமிறங்கியதைக் குறிக்கின்றன, […]
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை நேரடியாக போரில் இறங்காமல் இருந்த அமெரிக்கா இன்று திடீரென நேரடியாகவே போரில் இறங்கியது. இன்று ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது முதல் முறையாக நேரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, “அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது,” என்று […]
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படியான சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் மிகப் பெரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றுவிட்டால் , இந்த மோதல் முழுவதும் முடிந்துவிடும் என்று அவர் கூறியிருந்தார். அவரை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயை குறிவைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்து, […]
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகம் இருக்கும் இடமும் ஒன்று என வீடியோவை வெளியிட்டு ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொலை செய்ய போவதாக மிரட்டினார். கமேனி கொல்லப்பட்ட பின்னரே […]
இஸ்ரேல் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு செய்தி தொலைக்காட்சி சேனலான ”Abruptly” மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. செய்தி வாசிப்பின்போது தாக்குதல் நடந்ததால், வாசிப்பாளர் உடனடியாக அங்கிருந்து ஓடினார். இந்த காட்சி தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. எனவே, இந்த பதற்றமான சண்டையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பரபரப்பான […]
இஸ்ரேல் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஜூன் 13 முதல் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மையங்கள், இராணுவ இலக்குகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அமெரிக்காவின் பங்கு குறித்து, டிரம்ப் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், இஸ்ரேலுக்கு ஆயுத ஆதரவு வழங்குவதாக ஈரான் […]
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 ஜூன் 13 முதல் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மையங்கள், இராணுவ இலக்குகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களின் ஒரு […]
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளுடன் நட்புறவு என்பதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா , அமெரிக்க மக்களின் நலன், அமெரிக்காவே உலக நாடுகளின் தலைமை என்ற விதத்தில் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் உடன்.., முன்னதாக உக்ரைன் நாட்டுடன் கனிம வள ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி , உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி அதில் உடன்பாடு இல்லாமல் ட்ரம்ப் […]
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையித் அலி கமேனி இந்தியில் ஒரு ட்விட்டர் கணக்கைத் துவக்கியுள்ளார். இதற்கு முன் பல மொழிகளில் ட்விட்டர் கணக்கைத் துவக்கியுள்ளார். அதில், பாரசீக, அரபு, உருது, பிரஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்ய மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலும் கணக்குகளைத் துவங்கி உள்ளார். சையித் அலி ஹொசைனி கமேனி 1989 முதல் பதவியில் இருக்கும் ஈரானின் இரண்டாவது மற்றும் தற்போதைய உச்ச தலைவர் ஆவார். 1981 முதல் 1989 வரை ஈரானின் ஜனாதிபதியாக இருந்தார் […]
சமீபத்தில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையெடுத்து டெல்லி கலவரம் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என சர்ச்சைக்குரிய வகையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷெரீப் தனது டுவிட்டரில் பதிவிட்டார். பின்னர் டெல்லியில் உள்ள ஈரான் தூதர் அலி செகனி வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு இந்தியா […]
ஈரான் நேற்று அதிகாலை ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தி அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என அயதுல்லா அலி காமெனி கூறினார். ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை […]