டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகம் இருக்கும் இடமும் ஒன்று என வீடியோவை வெளியிட்டு ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொலை செய்ய போவதாக மிரட்டினார். கமேனி கொல்லப்பட்ட பின்னரே […]
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. டெஹ்ரானில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. […]
ரஃபா: காசாவின் ரஃபா நகரில் நடைபெற்று வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையை ஆதரிக்கும் நீதிமன்றம், ரஃபாவில் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஹமாஸ் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த நிலையில், இஸ்ரேலை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பிரிட்டோரியா நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்த […]
இஸ்ரேல்: இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது என் தந்தை ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நான் செய்தேன் என ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2023 அக்டோபர் மாதம் பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தற்போது வரையில், […]
தீ பிடிக்கும் வகையிலான பலுன்களை ஹமாஸ் அமைப்பினர் பறக்கவிட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாஹு அவர்களின் ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இடையே அடிக்கடி வான்வெளி தாக்குதல் மற்றும் பயங்கரவாத மோதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. இருப்பினும் கடந்த மாத இறுதியிலேயே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று இவர்களுக்கிடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. தற்போது இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியை பிடித்துள்ளது. […]
இஸ்ரேலில் ஆட்சி செய்து வந்த பெஞ்சமின் நெதன்யாகு தனது பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேலில் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்று உள்ளார். இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் தலைமையிலான லிக்குட் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால் புதிய அரசு அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க பெஞ்சமின் நெதன்யாகுக்கு 28 நாள் […]