அடேங்கப்பா!! இனி தங்கம் வாங்கவே முடியாது போல…சவரனுக்கு ரூ.520 உயர்வு!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அதுபோல், கடந்த வாரம் தங்கம் விலை கடும் சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், தீபாவளி முடிந்து இந்த வார தொடக்க நாளில் இருந்து இன்று வரை தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ஒரு சவரனுக்கு அதிரடியாக ரூ.520 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, சென்னையில் (17.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,700க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.79.50க்கும், கிலோ வெள்ளி ரூ. 79,500க்கும் விற்பனையாகிறது.
பால் விலை உயர்த்தப்படவில்லை.. ஆவின் கொடுத்த விளக்கம்..!
(16.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,080க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,635க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025