ஜார்க்கண்டில் ரயில் தடம் புரண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

ஜார்கண்ட் : சக்ரதர்பூர் அருகே ஹவுராவில் இருந்து மும்பை சென்ற விரைவு ரயில் தடம்புரண்டது. ஹோவாரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ஜாம்ஷெட்பூரில் இருந்து 80 கிமீ தொலைவில் படபாம்பூ அருகே அதிகாலை 3.45 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.
தடம் புரண்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில், 2 பேர் பலி, 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு ரயில்வே மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்தனர், அவர்கள் இப்போது மேல் சிகிச்சைக்காக சக்ரதர்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நாட்டில் சமீப காலமாக அதிகரித்து வரும் தொடர் ரயில் விபத்துகள் பயணிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தடம் புரண்டதற்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது, விபத்துக்குப் பிறகு அந்த வழித்தடத்தில் உள்ள பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்திய ரயில்வே உதவி எண்களையும் வழங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025