ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

ஈட்டி எறிதல் உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடத்தைப் பெற்றார்.

neeraj chopra

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா 9 மாதங்களுக்குப் பிறகு தனது முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.

பெர்னான்டா ஆண்டர்சன் பிட்டரை பெண்ணுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இதன்படி, நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பீட்டர்ஸ் 1431 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளார். மூன்றாம் இடத்தில் 1407 புள்ளிகளுடன் ஜெர்மன் வீரர் ஜூலியன் வெபர், பாகிஸ்தானின் தற்போதைய ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் 1370 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார்.

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் நடப்பு உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு, செப்டம்பர் 17, 2024 அன்று உலக தரவரிசையின்  முதலிடத்தை இழந்தார். அப்போது, அவர் வெள்ளி மற்றும் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார்.

இந்த ஆண்டு  தடகள சீசனில் அவரது நிலையான செயல்திறன் அவரை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த பச் இன்விடேஷனலை வென்றதன் மூலம் நீரஜ் தொடங்கினார். பின்னர் மே மாதம் தோஹா டயமண்ட் லீக்கில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

சமீபத்தில், பாரிஸ் டயமண்ட் லீக்கில் பட்டத்தை வென்று மீண்டும் அசத்தியுள்ளார். நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 2-ம் இடத்தையும், பிரேசிலின் மௌரிசியோ லூயிஸ் 3-ம் இடத்தையும் பிடித்தனர். நீரஜ் சோப்ரா இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்