NyoboltConceptEV [Image source : Nyobolt]
நியோபோல்ட் (Nyobolt) நிறுவனம், 6 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் கான்செப்ட் EV ஸ்போர்ட்ஸ் காரை வெளியிட்டுள்ளது.
நாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்கிறது. அந்த வகையில், அதிவேக-சார்ஜிங் பேட்டரிகளை தயாரிக்கும் நியோபோல்ட் (Nyobolt) நிறுவனம் ஒரு புதிய கான்செப்ட் இவி (Concept-EV) ஸ்போர்ட்ஸ் காரை வெளியிட்டுள்ளது.
இந்த காரை புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஜூலியன் தாம்சன் என்பவர் வடிவமைத்துள்ளார். இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், தற்போதைய மின்சார வாகனங்களை விட மிக விரைவாக சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் ஆக 6 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
மேலும் இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இது 1,600 மைல் வேகத்தில் சார்ஜ் செய்வதற்கு சமமாகும். இந்த நியோபோல்ட் கான்செப்ட் இவி கார் ஆனது மற்ற கார்களை விட எடை குறைவாக இருக்கும். ஏனென்றால், இதில் சிறிய மற்றும் இலகுவான புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை நியோபோல்ட் பயன்படுத்தியுள்ளது.
இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி 35kWh திறன் கொண்டுள்ளது. நியோபோல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாய் சிவரெட்டி கூறுகையில், முன்னெல்லாம் சிறிய பேட்டரிகளால் வாகனத்தை இலையாக முடியாது என்றும் விலையுயர்ந்த மற்றும் பெரிய பேட்டரிகள் இருந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும் என்றும் மக்கள் நினைக்கின்றனர்.
எங்களின் தனித்துவமான தொழில்நுட்பத்தின் மூலம் ஆறு நிமிட சார்ஜ் காரை உருவாக்கியுள்ளோம். மேலும், அதிக ஆற்றல் மற்றும் குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய சிறிய பேட்டரிகளையும் உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த நியோபோல்ட் கான்செப்ட் இவி ஸ்போர்ட்ஸ் கார் மூலம் நேரம் என்பது அதிக அளவில் மிச்சமாகும்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…