மீண்டும் களமிறங்கும் ஹீரோ கரிஷ்மா..! அசத்தப்போகும் ஸ்போர்ட்டி வடிவமைப்புடன் புதிய XMR 210..!

Published by
செந்தில்குமார்

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான Hero MotoCorp நிறுவனம், Hero Karizma XMR 210 என்ற அதிக திறன் கொண்ட மோட்டார் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இதை விற்பனைக்காக அறிமுகப்படுத்தும் டீலர் நிகழ்வில் புதிய கரிஸ்மா பைக் காட்சிப்படுத்தப்பட்டது.

Hero karizma [Imagesource : Twitter/@ravanaaar]

2003 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Karizma ZMR, இளைஞர்களை பெரும்பாலும் ஈர்த்தது. இது நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. பைக்கில் பல புதுப்பிப்புகளை செய்த போதிலும் காலப்போக்கில் விற்பனை மந்தமாகத் தொடங்கியது. இதனால் 2019 இல் நிறுவனம் அதன் தயாரிப்பை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Hero Karizma XMR 210: 

இந்த Hero Karizma XMR 210 பைக்கானது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இயங்கும் 210சிசி லிக்விட்-கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளது. இதன் ஆற்றல் சுமார் 25PS மற்றும் 20Nm இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hero XMR [Imagesource : Team-Maxabout]

கரிஸ்மா எக்ஸ்எம்ஆரின் அலாய் வீல்கள் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டிருப்பதால் மற்ற ஹீரோ தயாரிப்புகளில் இருப்பதை விட தடிமனான டயர்களுடன் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் இரண்டு முனைகளிலும் ஏபிஎஸ் ரிங்க்களைக் கொண்டிருப்பதால், டூயல்-சேனல் ஏபிஎஸ்-ஐக் கொண்ட முதல் ஹீரோ தயாரிப்பாக இருக்கலாம்.

Hero Karizma XMR 210 [Imagesource : Team-BHP]

ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் விலை :

Karizma XMR 210 இந்தியாவில் 2023 நவம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.6 லட்சம்  முதல் ரூ.1.8 லட்சம் வரை இருக்கலாம். இந்த பைக் Yamaha R15 V4, Suzuki Gixxer SF 250, பஜாஜ் பல்சர் F250 மற்றும் யமஹா FZ25 போன்றவற்றுடன் போட்டியிடும் வகையில் வெளிவரவுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

5 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

5 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago