வணிகம்

ஐந்தாவது நாள் பங்குச்சந்தை முடிவு.! 600 புள்ளிக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.!

Published by
செந்தில்குமார்

இந்தியா பொருளாதாரத்தில் முன்னிலையில் இருந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கின்றன. அதன்படி, கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்தில் கடந்த நான்கு நாட்களிலும் சரிவுடனே வர்த்தகமானது.

இந்த சரிவினால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர். இதனை ஈடு செய்யும் விதமாக இன்றைய வர்த்தக நாள் ஆனது முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. இன்றைய வர்த்தக நாளில் பிள்ளைகளுக்கு மட்டுமே உயர்ந்து வர்த்தகமாகி வந்தது.

இதனால் பல முன்னணி நிறுவனங்களில் பங்குகள் ஏற்றமடைந்தன. அதேபோல நிஃப்டி 19,000 புள்ளிகளை கடந்தது, தற்பொழுது ஐந்தாவது வர்த்தக நாள் ஆனது நிறைவடைந்துள்ள நிலையில், 63,559 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 634.65 புள்ளிகள் உயர்ந்து 63,782.80 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 190.00 புள்ளிகள் உயர்ந்து 19,047.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ், 900.91 புள்ளிகள் குறைந்து 63,148.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதோடு, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 264.90 புள்ளிகள் குறைந்து 18,857.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மேலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.03 டாலர் விலை உயர்ந்து 89.96 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 143.00 அல்லது 2.06% உயர்ந்து ரூ.7,088 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் 30 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களை தவிர மற்ற நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் உயர்ந்துள்ளன.

அதன்படி, ஆக்சிஸ் பேங்க், எச்சிஎல் டெக்னாலஜிஸ்,  டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளன ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. ஐடிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக. சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

3 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

5 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

13 hours ago