சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14-ஆக உயர்ந்து ரூ.3,876-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.51.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் தங்கத்தின் விலை விறுவிறுவென உயர்த்து, நடப்பாண்டு தொடங்கிய சில நாட்களிலேயே, ரூ. 31 ஆயிரம் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதனைத்தொடர்ந்து சற்றே குறைந்த தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.31,008 -க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.14 அதிகரித்து ரூ.3.876 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. பின்னர் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் ரூ.51.30 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.51, 300 -க்கும் விற்பனையாகிறது.
மேலும், ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சவரனுக்கு ரூ. 31,000-க்கு மேல் தங்கம் விற்கப்படுவதால் சுபமுகூா்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளா்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…