சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத உச்சம்! 24,000த்தை நெருங்குமா நிஃப்டி?

Published by
அகில் R

பங்குச்சந்தை : நாடளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த சனிக்கிழமை (ஜூன்-1) அன்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அன்று மாலை செய்தி ஊடகங்களின் கருத்துக்கணிப்பும் வெளியானது. அதில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெரும் என்று வெளியான கருத்து கணிப்பில் தெரிய வந்தது.

இதனால், வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தையின் குறியீடுகளாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வரலாறு காணாத உச்சம் பெற்று வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (மே-31) அன்று சென்செக்ஸ் (BSE) 75.71 புள்ளிகள் அதாவது 0.10% உயர்ந்து 73,961.31 ஆக முடிவடைந்து இருந்தது.

அதே போல நிஃப்டி (NSE) 42.05 அதாவது 0.19% உயர்ந்து 22,530.70 புள்ளியில் முடிந்து இருந்தது. தற்போது, வாரத்தின் முதல் நாளான இன்று பிஎஸ்சி சென்செக்ஸ் (BSE) 2,777.58 புள்ளிகள் (3.75%) உயர்ந்து 76,738.89 என்ற புள்ளிகள் எட்டி புதிய வரலாற்று சாதனையை தொட்டுள்ளது.

அதே போல மறுபக்கமும் என்எஸ்சி நிஃப்டி (NSE) 808 புள்ளிகள் (3.58%) உயர்ந்து 23,338.70 புள்ளிகள் எட்டி வரலாற்று சாதனையை தொட்டு 24,000-த்தை நெருங்கி வருகிறது. இதன் மூலம் பவர் கிரிட் (Power Grade), என்டிபிசி (NTPC), லார்சன் & டூப்ரோ, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் மஹிந்திரா&மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

Published by
அகில் R

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

54 minutes ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

1 hour ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

2 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago