வரலாற்றில் புதிய உச்சம் – சென்செக்ஸ் 531.96 புள்ளிகள் உயர்ந்து, 56,656.68 புள்ளிகளில் வர்த்தகம்!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய பங்கு சந்தையானது ஏற்றம் காணும் என நிபுணர்கள் கூறி வந்த நிலையில், இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகிறது.

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இன்றும் சற்று ஏற்றம் கண்டுள்ளது.

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 198.72 புள்ளிகள் அதிகரித்து, 56,323.44 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் அதிகரித்து, 16,752.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 321.99 புள்ளிகள் அதிகரித்து, 56,446.71 புள்ளிகளாகவும், நிஃப்டி 103.30 புள்ளிகள் அதிகரித்து, 16,808.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1,535 பங்குகள் ஏற்றத்திலும், 339 பங்குகள் சரிவிலும், 107 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்திய பங்குசந்தை புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. அதாவது, சென்செக்ஸ் குறியீட்டு எண் 531.96 (0.95%) புள்ளிகள் உயர்ந்து, 56,656.68 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 152.85 (0.91%) புள்ளிகள் உயர்ந்து, 16,858.05 புள்ளிகளாக காணப்படுகிறது.

இந்திய சந்தையானது ஏற்றம் காணும் என நிபுணர்கள் கூறி வந்த நிலையில், இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, 22 பைசா அதிகரித்து, 73.46 ரூபாயாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் 73.68 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

மேலும், இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தில் ஏற்றம் காணப்படும் நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஆசிய சந்தையில் இன்று சில தடுமாற்றம் இருந்தாலும் பெரும்பாலான சந்தைகள் உயர்வுடன் காணப்படுகிறது என்பது குறிப்பித்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

7 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

8 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

9 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

10 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

10 hours ago