வணிகம்

ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 446 புள்ளிகள் உயர்வு..!

Published by
செந்தில்குமார்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ சென்செக்ஸ் 446.03 புள்ளிகள் உயர்ந்து 63,416 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு.

இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த வாரம் இதுவரை இல்ல உச்சத்தை எட்டி புதிய சாதனையை படைத்தது. அதனைத்தொடர்ந்து இன்றைய வர்த்தக நாளில் 63,151 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ், வர்த்தக நாளின் முடிவில் 446.03 புள்ளிகள் உயர்ந்து 63,416 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 126.20 புள்ளிகள் அல்லது 0.68% உயர்ந்து 18,817 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 62,970 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,691 புள்ளிகளாகவும் நிறைவடைந்தது.

கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது மும்பை பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

மாருதி சுசுகி இந்தியா, ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள 50 நிறுவனங்களின் பங்குகளில், 38 நிறுவனங்கள் லாபமும், 12 நிறுவனங்கள் நஷ்டமும் அடைந்துள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

2 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

3 hours ago

தலைமை காஜி மறைவு…விஜய் முதல் இபிஎஸ் வரை இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…

3 hours ago

தோனிக்கு இதுதான் கடைசி போட்டி…பண்டிகை மாதிரி கொண்டாடுங்க! வேண்டுகோள் வைத்த முகமது கைஃப்!

அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…

4 hours ago

ED-க்கும் பயமில்லை..பிறகு எதுக்கு உதயநிதியின் கூட்டாளிகள் தலைமறைவு? நயினார் நாகேந்திரன் கேள்வி!

சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…

5 hours ago

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையில் ரொனால்டோ? ஸ்கெட்ச் போடும் முக்கிய அணிகள்!

அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…

5 hours ago