மதுரை

மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு.! போலீசை தாக்க முயன்றதால் பராபர்ப்பு.!

மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி வினோத் என்பவர் காவல்துறையால் சுடப்பட்டார்.  மதுரையில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சார்பில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று , இரவு அதே போல காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது, மதுரை மாட்டுத்தாவணி அருகே, வினோத் என்பவரை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். வினோத் மீது ஏற்கனவே 2 காவல் நிலையத்தில் பலவேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து […]

3 Min Read
Default Image

திடீரென காரில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.!

மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் முடித்து அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வழியில் மக்களை கண்டதும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு காரில் இருந்து இறங்கி அவர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். தரிசனம் : பின்னர் […]

4 Min Read
Default Image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பூரண கும்ப மரியாதை.!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார்  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று மற்றும் நாளை இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்னர் திரௌபதி முர்மு தமிழகத்துக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறை. இன்று காலை டெல்லியில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். வரவேற்பு : மதுரை விமான நிலையம் வந்தடைந்த குடியரசு தலைவர் திரௌபதி […]

3 Min Read
Default Image

#Breaking : மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்.! டெண்டர் வெளியீட்ட சென்னை மெட்ரோ.!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டெண்டர் கோரப்பட்டுள்ளது.  சென்னையை அடுத்து மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது. இதற்கு முதற்கட்டமாக தற்போது இணையதளம் வாயிலாக மற்ற கட்டுமான நிறுவங்களிடம் இருந்து டெண்டர் கோரியுள்ளது. மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் இரண்டு பிரிவுகளாக […]

3 Min Read
Default Image

உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவு!

மதுரை அருகே ஆர்யபட்டியில் உள்ள கல்யாண கருப்புசாமி கோயில் உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவு.   மதுரை கல்யாண கருப்பசாமி கோவிலில் சிவராத்திரி பூஜைக்கான உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த மலைக்கள்ளன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமண்ட்ட்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவராத்திரி பூஜைக்காக காணிக்கை வசூலிப்பதில் கையாடல் நடக்க வாய்ப்புள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு கடுமையானதாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து, வசூல் முடிந்து கோயில் […]

2 Min Read
Default Image

நெல்மூட்டைங்கள் மழையில் நனைவது வேதனை அளிக்கிறது.. தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.! உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  தமிழகத்தில் நெல் அறுவடை செய்த பிறகு,  அதனை கொள்முதல் செய்வதற்காக, குவித்து வைக்கப்பட்டு இருக்கும். பல்வேறு சமயங்களில் மழை பெய்து அந்த நெல் மூட்டைகள் நனைந்து ஈரப்பதம் அதிகமாகி விடும். பல்வேறு சமயங்களில் அது வீணாகி விடுகிறது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு : இது குறித்து,மதுரை மேலூரில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை மழையில் […]

3 Min Read
Default Image

மதுரை விமான நிலையத்தில் கருவாடு கடை.. பிரதமரின் ஒரு பொருள் ஒரு நிலையம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை.!

பிரதமரின் ’ஒரு பொருள் ஒரு நிலையம்’ திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.  உள்ளூர் பிரபலம் : மத்திய அரசு அண்மையில், ஒரு பொருள் ஒரு நிலையம் எனும் திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்தியது. இந்த ரயில் நிலையங்களில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பிரபலமான பொருட்களை விற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும். ஒரு பொருள் ஒரு நிலையம் : அப்படி, சென்னை, காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், மதுரை […]

3 Min Read
Default Image

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம்…!

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனை கூடம் தொடங்கப்பட்டுள்ளது ரயில்வே நிர்வாகம், உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை  அமைத்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள 5000 ரயில் நிலையங்களில் இது போன்ற விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளம்பட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடி மற்றும் வாஞ்சிமணியாச்சியில் மக்ருன், ராமேஸ்வரத்தில் […]

3 Min Read
Default Image

மதுரையில் ஆயுதம் ஏந்தி ஊர்வலம் செல்ல தடை விதிப்பு!

ஆயுதல் ஏந்தியபடி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு. ஆயுதல் ஏந்தியபடி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், ஒத்திகை, பயிற்சி அல்லது கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் இன்று முதல் 25-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொது, தனியார் இடங்களில் ஆயுதம் ஏந்தியோ, ஆயுதம் ஏந்தி சீருடையிலோ ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த  தடை விதிக்கப்படுகிறது. பொது அல்லது தனியார் இடமாக்க இருந்தாலும் வரும் 25-ஆம் […]

2 Min Read
Default Image

மதுரை சிறை கைதிகளுக்கு சூப்பரான நூலக திட்ட வசதி.! தமிழகத்தில் இதுவே முதல்முறை.!

மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கேபிள் வழியாக ஆடியோ வீடியோ உடன் ஒளிபரப்பப்படும் சிறப்பு நூலக திட்டத்தையும் சிறைத்துறை தொடங்கியுள்ளது. தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூசாரி தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். கைதிகளின் நலனுக்காக ஏற்கனவே கைதிகளை காண வருபவர்களுக்கு நவீன நேர்காணல் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளார். அதேபோல் தற்போது சிறை கைதிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சிலை […]

4 Min Read
Default Image

ஆன்லைன் ரம்மி – பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!

ஆன்லைன் ரம்மியால் மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் தற்கொலை.  இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்த ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழப்பதோடு இறுதியில் தங்களது குடும்பத்தையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் இதற்காக பணத்தை கடன் வாங்கியாவது விளையாட வேண்டும் என்று எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர். இறுதியில் கடன் தொல்லை தாங்க இயலாமலும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில், […]

3 Min Read
Default Image

13 பேர் விடுதலை விவகாரம்.! தமிழக அரசு உத்தரவில் தலையிட விரும்பவில்லை.! உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.!

மேலவளைவு ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் 13 பேர் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  1997ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளைவு கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வெற்றி பெற்றார். இதனை அடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனை மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். மேலும் அவரை மட்டுமல்லாமல் மேலும் 6 பெரும் கொலை செய்ய்யப்பட்டனர். இந்த வழக்கில் […]

3 Min Read
Default Image

எங்கே எங்கள் எய்ம்ஸ்.? செங்கல்களுடன் போராட்டத்தில் இறங்கிய சிபிஎம், திமுக உள்ளிட்ட கூட்டணி காட்சிகள்.!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு அதில் சுற்று சுவர் கட்டும் பணிகளை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை என திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்காதது கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

3 Min Read
Default Image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு..! காரை பரிசாக பெற்றவர் இவர் தான்..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.  மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற தற்போது  நிறைவடைந்துள்ளது. இதில் 10 சுற்றுகள் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் 820 மாடுகள் களமிறங்கிய நிலையில், 304 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 50 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு முதலமைச்சர் […]

3 Min Read
Default Image

#BREAKING : பாலமேடு ஜல்லிக்கட்டு – மாடுபிடி வீரர் அரவிந்த் உயிரிழப்பு..!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், அரவிந்தராஜனுக்கு மாடு முட்டியதால்  படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு.  மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.  பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அரவிந்த் ராஜன் என்பவர் 9  மாடுகளை பிடித்து 3-வது இந்த நிலையில் அரவிந்தராஜனுக்கு மாடு முட்டியதால்  படுகாயம் அடைந்த அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற வேண்டி உயிரிழந்துள்ளார். அதேபோல் சூரியூர் ஜல்லிக்கட்டில் காலி […]

2 Min Read
Default Image

பாலமேடு ஜல்லிக்கட்டு – 15 காளைகளை அடக்கி மணி முதலிடம்..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் மணி என்பவர் 15 காளைங்களை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார்.  மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இதில், மணி என்பவர் 15 காளைங்களை அடக்கி முதலிடத்திலும், 11 காளைகளை அடக்கி ராஜா இரண்டாவது இடத்திலும், 9 காளைகளை அடக்கி வாஞ்சிநாதன் மூன்றாவது  பிடித்துள்ளனர்.

1 Min Read
Default Image

பாலமேடு ஜல்லிக்கட்டு – 2 பேர் முதலிடம்..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் இரண்டு சுற்று முடிந்த நிலையில் இரண்டு வீரர்கள் 9 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது 2-வது சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.  இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் இரண்டு சுற்று முடிந்த நிலையில் இரண்டு வீரர்கள் 9 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர். பாலமேட்டையை சேர்ந்த வீரர்கள் ராஜா, மணி தலா ஒன்பது காளைகளை அடக்கி முதல் இடத்திலும், அரவிந்த் எட்டு காளைகளை அடக்கி இரண்டாவது இடத்திலும், வாஞ்சிநாதன் ஆறு […]

2 Min Read
Default Image

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் – 8 வீரர்கள் தகுதி நீக்கம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆளுமாறாட்டம் செய்த 8 மாடுபிடி  வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று தொடங்கி நடைபெற்ற நிலையில், இந்த சுற்றில் வாடி வாசல் வழியாக 94 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், தற்போது இந்த சுற்று நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆளுமாறாட்டம் செய்த 8 மாடுபிடி  வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2 Min Read
Default Image

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு..! முதல் 3 இடத்தை பிடித்தவர்கள் இவர்கள்தான்..!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், ஏழு காளைகளை அடக்கி ராஜா என்பவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.  மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று தொடங்கி நடைபெற்ற நிலையில், இந்த சுற்றில் வாடி வாசல் வழியாக 94 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தற்போது இந்த சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், இதில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி   ஏழு காளைகளை அடக்கி ராஜா என்பவர் முதலிடத்தையும், 6 காளைகளை அடக்கி அரவிந்த் […]

2 Min Read
Default Image

மதுரை எய்ம்ஸ் தலைவர் காலமானார்..!

மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனை தலைவர் நாகராஜன் மாரடைப்பு காரணமாக காலமானார்.  கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி எய்ம்ஸ் தலைவராக மருத்துவர் நாகராஜனை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த நிலையில், இவர் நள்ளிரவு 12 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனை தலைவராகவும் , சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆற்றல்சார் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 Min Read
Default Image