இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 1,331 பேருக்கு கொரோனா…15 பேர் பலி.!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 1,331 பேருக்கு தொற்று உறுதியானது.  இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் […]

3 Min Read
coronavirus india

ம.பி.யில் விபத்து…50 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து…15 பேர் பலி.!!

கார்கோனில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்தியபிரதேச மாநிலத்தில் கார்கோன் மாவட்டத்தில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. போராட் ஆற்றின் 50 அடி உயர பாலத்தில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று கீழே விழுந்தது. இதனால் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி 15 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. எம்பி10-பி-7755 என்ற பேருந்து எண் கார்கோனிலிருந்து இந்தூருக்குச் சென்று கொண்டிருந்தபோது கார்கோன்-திக்ரி சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்து ஆற்றின் மீது உள்ள […]

4 Min Read
bus falls from a bridge in Khargone

கர்நாடக தேர்தல் – கோவாவில் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை!

கர்நாடக தேர்தல் நாளில் கோவாவில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை கோவாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. பாஜக, காங்கிரஸ், மஜத முக்கிய கட்சிகளாகப் போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் […]

3 Min Read
Pramod Sawant

‘மோச்சா புயல்’ – ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது..!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே 10-ஆம் தேதி புயல் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த […]

3 Min Read
mochcha

#KarnatakaElection : இன்றுடன் ஓய்கிறது பரப்புரை..! நாளை தேர்தல்..!

கர்நாடகாவில் இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையும் நிலையில், நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த சில மாதங்களாகவே அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்தது.தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும்  நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க  வேண்டும் என்ற முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. […]

3 Min Read
karnatakaelection

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட தடை – மம்தா பானர்ஜி அறிவிப்பு.!

தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி அறிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், படத்தை வெளியிட கூடாது என பலதரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வந்தது. ஆனால், படம் கடந்த 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து படம் வெளியாகியுள்ள நிலையில், பலரும் படத்தை தடை செய்யவேண்டும் என்றும், பலரும் படத்திற்கு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். தற்போது, தி […]

4 Min Read
Mamata Banerjee

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவு..!!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது.  கர்நாடகா மாநிலத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில்  பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம், உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்று கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், அனைத்து கட்சியில் இருந்த முக்கிய தலைவர்கள் பலரும் கர்நாடகாவில் இருந்த பல இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வந்தனர். பிரதமர் மோடி, ஜேபி நட்டா, […]

3 Min Read
MODI AND Priyanka Gandhi

கஜராஜா பலராமா யானை மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது…பிரதமர் மோடி இரங்கல்.!!

மைசூர் தசரா கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகித்து வந்த கஜராஜா பலராமா என்கிற யானை உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் காசநோய் காரணமாக நேற்று உயிரிழந்தது. இதனையடுத்து,  பிரதமர் நரேந்திர மோடி பலராமனுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இந்த சம்பவத்தால் தான் வருத்தம் அடைவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் கூறியதாவது ” பல ஆண்டுகளாக, மைசூரில் நடந்த தசரா கொண்டாட்டங்களில் கஜராஜா பலராமா  முக்கிய அங்கமாக இருந்தார். மா சாமூண்டீஸ்வரியை சுமந்து வந்த […]

3 Min Read
pm modi sad

அரிய வாய்ப்பு: SBI to CRPF வேலை….இந்த வாரம் தான் விண்ணப்பிக்க கடைசி தேதி.!

குஜராத் உயர் நீதிமன்ற உதவியாளர் ஆட்சேர்ப்பு 2023: குஜராத் மாநிலத்தில் உள்ள துணை குஜராத் உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பதவிக்கான காலி இடங்கள் நிரப்படுகிறது.. பணியமர்த்துகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு gujarathighcourt.nic.in மற்றும் hc-ojas.gujarat.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1778 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. இதன் ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 28 தொடங்கி, விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதி மே 19 அன்று நிறைவடைகிறது. எஸ்பிஐ எஸ்சிஓ […]

9 Min Read
job alert

உணவு டெலிவரி தள போட்டியில் ONDC.! சோமாட்டோ, ஸ்விகிக்கு புதிய மாற்று.?

உணவு டெலிவரி ஆப்களுக்கு மாற்றாக ONDC எனும் புதிய தளம் ஒன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளானது தற்போது மிகவும் அதிகமாகி கொண்டு வருகிறது. இந்த உணவு டெலிவரி வணிக போட்டியில் சோமட்டோ (Zomato) மற்றும் ஸ்விகி (Swiggy) இரண்டும் முன்னணி வரிசையில் இயங்கி கொண்டு இருக்கின்றன. இந்த ஆப்கள் மூலம் உணவகத்தில் இருந்து பயனாளர்கள் வீட்டிற்கு குறுகிய நேரத்தில் உணவை வழங்கி வருகின்றன. இருந்தும், தற்போது அந்த ஆப் […]

4 Min Read
ondc

கேரள படகு விபத்து.! நிவாரண தொகை 10 லட்சமாக உயர்வு.! முதல்வர் அறிவிப்பு.!

படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதி தூவல் தீரம் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகானது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் பயணித்த 40க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களை மீட்க மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 22 பேர் பலியாகியுள்ளதாக […]

4 Min Read
Pinarayi Vijayan Kerala CM

SENSEX: பங்குச்சந்தை….சென்செக்ஸ் 780 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 784 புள்ளிகள் அதிகரித்து 61,838 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,279 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை, வர்த்தகத்தில் கடந்த வாரம் சரிவில் முடிவடைந்த நிலையில், இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 784 புள்ளிகள் அதிகரித்து 61,838 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 210 புள்ளிகள் அதிகரித்து 18,279 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த […]

2 Min Read
BSENSE Sensex

வங்கக்கடலில் வரும் 10ஆம் தேதி புதிய புயல்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.! 

வங்கக்கடலில் வரும் 10ஆம் தேதி புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே 10ஆம் தேதி புதிய புயல் உருவாகிறது என்றும், அந்த புயலுக்கு மோச்சா (Mocha) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் உருவாகி வங்க தேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதியதாக உருவாகும் இந்த புயலானது முதலில் வடமேற்கு […]

2 Min Read
depression in tamil nadu

பஞ்சாபில் மீண்டும் பொற்கோவில் அருகே குண்டுவெடிப்பு.! பொதுமக்கள் பதற்றம்.!

பஞ்சாப் அமிர்தரஸ் பகுதியில் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ் நகரில் உள்ள பொற்கோவில் அருகே அடுத்தடுத்த நாட்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.  ஏற்கனவே நேற்று முன்தினம் (6ஆம் தேதி) சரகர்ஹி சாராய் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு சிறுமி காயமடைந்தார். தற்போது இன்று அதே  போல, அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே உள்ள பிரதான […]

3 Min Read
Amritsar

Today’s Live: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் கேரளா முதல்வர்.!

நிவாரணம் அறிவிப்பு: கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியான சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரளா முதல்வர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர் படகு விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரின் செலவையும் அரசே ஏற்கும் என முதல்வர் பினராயி விஜயம் அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வாழ்த்து: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக […]

4 Min Read
LIVE NEWS

இந்திய போர் விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து.! 2 பெண்கள் உயிரிழப்பு.!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய போர் விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.  இந்திய போர் விமானங்கள் பயிற்சியின் போது விபத்தில் சிக்கும் செய்திகளை நாம் அவ்வப்போது பார்த்து இருப்போம். தற்போது அதே போல ஒரு சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில், சூரத்கார் இடத்தில் இருந்து புறப்பட்ட மிக்-21 ரக போர் விமானமானது, ஹனுமன்கர் எனும் பகுதியில் பறந்து செல்கையில் வீட்டின் மீது விழுந்துள்ளது. […]

3 Min Read
Rajastan Get Crash

கேரளா படகு விபத்து… பலி எண்ணிக்கை தொடர் உயர்வு… மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் வரவழைப்பு.!

கேரளா படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆகவும், மீட்புப்பணிக்கு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதி தூவல்தீரம் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த படகு விபத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் கூட இருப்பதாக தகவல்கள் […]

4 Min Read
KeralaBoatHelicopter

நீட் தேர்வு பயம்.? மாணவர் வாடகை ரூமில் தூக்கிட்டு தற்கொலை.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.  மணிப்பூர் மாநிலத்தை தவிர இந்தியா முழுவதும் நேற்று மருத்துவ படிப்பிறகான நுழைவு தேர்வு (NEET) நடைபெற்றது. இந்த நீட் தேர்வினை லட்சகணக்கான மாணவ மாணவியர் எழுதினர். இந்த நீட் தேர்வுக்கு பயந்து மாணவ மாணவியர் தற்கொலை செய்துகொள்ளும் சோகமான நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை, நீட் தேர்வுக்கு முதல்நாள், சத்தீஸ்கர் […]

3 Min Read
SUCIDE

இறுதிகட்டத்தை நோக்கி கர்நாடக தேர்தல்… இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.!

இன்று மாலையுடன் கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.  நாளை மறுநாள் இந்திய அரசியல் களமே உற்றுநோக்கும் மிக முக்கிய தேர்தலாக கர்நாடக சட்டமன்ற தேர்தல் அமைய உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் மே 10 (வரும் புதன்கிழமை) நடைபெறவுள்ளது. அடுத்த வருடம் 2024இல் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் இந்த தேர்தலை பாஜக – காங்கிரஸ் ‘நாடாளுமன்ற தேர்தல் ஒத்திகை’ போல எண்ணதொடங்கிவிட்டனர் . இதனால் அங்கு பிரச்சாரமானது வழக்கத்தை விட அதிக […]

5 Min Read
PM Modi and Rahul Gandhi

கேரள மாநில படகு விபத்து.! பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதி படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று, இந்நிலையில், இதுவரை 21 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் […]

2 Min Read
malappuram boat accident