Categories: சினிமா

நடிகை கௌதமி அளித்த புகாரில் 6 பேர் கைது.!

Published by
கெளதம்

நடிகை கௌதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, கோட்டையூர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடியாக விற்றுவிட்டதாக, நடிகை கௌதமி சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

தற்போது, நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் முக்கிய நபரான அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ்குமார் உட்பட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார்கைது செய்தனர். முன்னதாக நடிகை கவுதமி தொடர்ந்த மோசடி வழக்கில், தயாரிப்பாளர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் மறுத்துவிட்டது.

ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது! பொன்முடியின் தண்டனையை வரவேற்ற குஷ்பு!

இந்நிலையில், நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ் குமார் உட்பட 6 பேர் கேரளாவில் பதுங்கியிருந்த நிலையில், இன்று கேரளாவின் திருச்சூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

6 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

7 hours ago