தனுஷ்கோடிக்கு உதவியாக களமிறங்கும் அப்துல் காலிக்.! இதுவும் ரீஎன்ட்ரி தான்.!

Published by
பால முருகன்

நடிகர் சிம்பு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் “சிம்பு சினி ஆர்ட்ஸ் ” எனும் பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். அவர் நடித்த படங்கள், சிம்பு நடித்த ஆரம்பகால சில திரைப்படங்கள் என அனைத்தையும் அந்த நிறுவனம் தயாரித்தது.

அடுத்தாக சிம்பு ஒழுங்காக படங்களில் நடிக்காமல் இருந்ததால், அந்த நிறுவனம் பட தயாரிப்பதையும் நிறுத்தியது.இதனையடுத்து சிம்பு தற்போது சினிமாவில் மீண்டும் சரியாக நடிக்க வந்துவிட்டதால் சிம்பு “சிம்பு சினி ஆர்ட்ஸ் ” நிறுவனமும் பழையபடி படங்களை தயாரித்து வழங்க ஆரம்பித்துவிட்டது.

நீண்ட ஆண்டுகளுக்கு பின் “சிம்பு சினி ஆர்ட்ஸ்” நிறுவனம் விநியோகஸ்தராக களமிறங்குகிறது. அதன்படி, தற்போது இயக்குனரும்,நடிகருமான எஸ்ஜேசூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “கடமையை செய்”. இந்த படத்தின் திரையரங்கு உரிமத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தை வெங்கட் ராகவன் எனும் இயக்குனர் இயக்கி உள்ளார். யாஷிகாஆனந்த் ஹீரோயினாக நடித்து உள்ளார். மே மாதம் இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

28 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago