Prakash Raj [File Image]
சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட ‘விக்ரம்’ லேண்டரின், சுற்றி வரும் பாதையின் உயரம் இறுதி டீபூஸ்டிங் மூலம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், லேண்டரானது ஆகஸ்ட் 23 அன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது.
இந்த நிலையில், விக்ரம் லேண்டரால் நிலவில் எடுத்த முதல் புகைப்படம் என்று கூறி, கார்டூன் புகைபடம் ஒன்றை நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு நபர் டீ போடுவது போன்ற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை, நிலவில் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜின் இந்த செயல் விஞ்ஞானிகளையும், நாட்டு மக்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை பார்த்த பலர், பா.ஜ.க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீதான கண்மூடித்தனமான வெறுப்புக்காக அவர் இந்தப் பதிவைப் பகிர்ந்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இது பிரதமர் நரேந்திர மோடி மீதான “குருட்டு வெறுப்பால்” உந்தப்பட்ட பதிவு என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…