siddharth aditiraohydari [File Image]
Siddharth – AditiRao : நடிகர் சித்தார்த்க்கும் நடிகை அதிதி ராவ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வதுவழக்கமான ஒன்று. அந்த வகையில், நடிகர்சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். காதலிப்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தும் விட்டார்கள். ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்றாலும் கூட இருவரும் ஒன்றாக தான் சென்றும் வருகிறார்கள்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கப்பூரில் உள்ள ரங்கநாத சுவாமி கோவில் மண்டபத்தில் இவர்கள் இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், திருமணம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார்கள். நிச்சயதார்த்தம் செய்தபோது மாற்றிக்கொண்ட மோதிரத்தை காட்டி இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். புகைப்படத்தை வெளியீட்டு இவர்கள் அறிவித்ததன் மூலம் இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்ததாக வெளியான செய்தி உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. விரைவில் இவர்களுடைய திருமணம் குறித்த செய்தியும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…