இயக்குனர் பாலாவுக்கு இந்த நிலைமையா.!? கண்டிஷன் கடிவாளம் போட்ட தயாரிப்பாளர் சூர்யா.!

Published by
மணிகண்டன்

சூர்யா நடிப்பில் அடுத்ததாக உருவாகும் புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார். இதன் ஷூட்டிங் பொங்கல் கழித்து மூன்று மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இயக்குனர் பாலா, ஒரு காலத்தில் இவரை கண்டு பயப்படாத நடிகர்கள் கிடையாது. இவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிடமாட்டோமா என எங்கும் நடிகர்கள் ஏராளம். அப்படி இருந்தவர் தற்போது ஒரு பெரிய ஹிட் கொடுத்து கம்பேக் கொடுக்க
போராடி வருகிறார்.

முதலில் அதர்வாவை வைத்து படம் எடுக்க முனைந்தார். அடுத்து சில ஹீரோக்களை ஒன்றிணைத்து படம் எடுக்க நினைத்தார். கடைசியில் சூர்யாவை வைத்து ஒரு பெரிய ஹிட் கொடுக்க அவரிடம் கதை கூறி ஓகே வாங்கி வைத்துள்ளார்.

இந்த படத்தில் சூர்யா நடிக்க சில கண்டிஷன்கள் போட்டு அதனை அக்ரிமெண்ட்டில் எழுதி கையெழுத்து வாங்கிகொண்டுதான் பட ஷூட்டிங்கிற்கே கிளம்ப உள்ளாராம்.

முதலில் பாலா தான் நினைத்த காட்சி வரும் வரையில் எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை என காத்திருந்து எடுப்பார். அப்படித்தான் தாரை தப்பட்டை திரைப்படம் முதலில் எடுக்கப்பட்டு பாலாவுக்கு திருப்தி இல்லாமல், மீண்டும் எடுக்கப்பட்டதாக கூறுவார்கள். படம் பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அந்தமாதிரியான பிரச்சனைகளை மனதில் கொண்டு , தயாரிப்பாளர் சூர்யா (இந்த படத்தை தயாரிப்பதும் சூர்யா தான்) முதலிலேயே 3 மாதத்திற்குள் மொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட வேண்டும் என அக்ரிமெண்ட் எழுதி கையெழுத்தி வாங்கியுள்ளாராம். பொங்கல் கழித்து 3 மாதத்தில் ஷூட்டிங்கை முடித்து அடுத்து படத்தின் போஸ்ட் ப்ரொடெக்சன் வேலைகளை ஆரம்பிக்க உள்ளாராம் சூர்யா.

ஏற்கனவே படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிட்டது. அடுத்து ஷூட்டிங் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

1 hour ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

2 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

3 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

5 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

6 hours ago