dushara vijayan and arulnithi [Image source : file image]
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை துஷாரா சமீபத்தில் வெளியான “கழுவேத்தி மூர்க்கன்” திரைப்படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராசா துஷாரா விஜயன் “கழுவேத்தி மூர்க்கன்” படப்பிடிப்படப்பிடிப்பு சமயத்தில் நடந்த சில சம்பவங்களை பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது பேசிய அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருநாள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
அந்த சமத்தில் நான் அருள்நிதி சார் அடிப்பது போன்ற காட்சி ஒன்று எடுக்கப்படவிருந்தது. அந்த காட்சியில் நான் தெரியாமல் நிஜமாகவே என்னுடைய கை தவறி அருள்நிதி சாரை அடித்துவிட்டேன். இதனை பார்த்த அருள்நிதி சார் சற்று அதிர்ச்சியாகவே பக்கத்தில் இருந்தவரிடம் என்னயா அந்த பொண்ணு நிஜமாகவே அடிக்கிறது..? என்று கூறினார்.
நான் அந்த சமயத்திலேயே அருள்நிதி சாரிடம் சாரி சார் என்று மன்னிப்பு கேட்டு விட்டேன்” என கூறியுள்ளார். மேலும் நடிகை துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை இரண்டாவது பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…