Categories: சினிமா

அந்த காரணத்துக்காக தற்கொலைக்கு முயன்றேன்! கிருத்திகா அண்ணாமலை வேதனை!

Published by
பால முருகன்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இவர் வில்லத்தனமான வேடங்கள் கொடுத்தாலும் அதில் எந்த அளவிற்கு நடிக்க முடியுமோ அதே அளவிற்கு நடித்து கொடுத்துவிடுவார். இவர் தற்போது சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தன்னுடைய விவாகரத்து பற்றியும் அதனால் தாங்க முடியாத வேதனையால் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றதாகவும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனது திருமண வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அந்த அளவிற்கு பல பிரச்சனைகள் இருக்கிறது.

அட்லீயை எல்லோரும் கொண்டாடனும்! உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்!

எனக்கு திருமணம் முடிந்த பிறகு சரியாக 10 மாதங்களில் குழந்தை பிறந்தது. அந்த சமயம் என்னுடைய கைகளில் மூன்று சீரியல்களும் இருந்தது. குழந்தையை பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற காரணத்தால் சீரியல்களை விட்டுவிட்டு வீட்டில் இருந்தேன். வீட்டில் இருந்த நாளில் இருந்து எனக்கும் என்னுடைய கணவருக்கும் பயங்கரமாக சண்டை நடந்தது. எங்களுடைய இருவருக்கும் இடையே தகராறு தொடங்கியது.

பின்னர் அவர் செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் சீரியல் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால், அதெல்லாம் பார்த்துக்கொண்டு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் வீட்டிலே அவர் இருந்தார். எனவே, இதனை வைத்து எங்கள் இருவருக்கும் இடையே சண்டை பெரிதாக வெடித்தது. இந்த சித்ரவதை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

அந்த அளவிற்கு மிகவும் வேதனையாக அந்த சமயம் இருந்தது. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இது நடந்தது. இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் எல்லாத்தையும் மறைந்து நான் மீண்டும் அவருடன் இருக்க விரும்பினேன்.நாலு வருஷம் அவரோட இருக்கேன். அதன்பிறகு அவரைத் தாங்கும் பொறுமையை இழந்து அவரை விவாகரத்து செய்தேன்” எனவும் நடிகை கிருத்திகா அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Recent Posts

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

2 hours ago

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

3 hours ago

பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க தலைமை…தவெக விஜய் கடும் தாக்கு!

சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…

3 hours ago

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…

4 hours ago

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

6 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

7 hours ago