Categories: சினிமா

இயக்குனராகும் நயன்தாரா.? இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம்.!

Published by
செந்தில்குமார்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் வல்லமை கொண்ட இவர், கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி பல பிளாக் பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜாவான் திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்மையில், இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, தனது இரண்டு ஆண் குழந்தைகளை வளர்ப்பதிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் கேமராவை இயக்குவது போல நின்று கொண்டிருக்கிறார். அந்த பதிவில் ‘புதிய தொடக்கங்களின் மேஜிக்கை நம்புங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Nayan [Image source : Instagram/@Nayanthara]

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தினால் ரசிகர்கள் அனைவரும் நயன்தாரா இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், நடிகை நயன்தாரா தற்போது நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘அன்னபூரணி’ மற்றும் டியூட் விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

42 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

1 hour ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

3 hours ago