rashmika salary in animal movie [file image]
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ளார். படத்தில் பாபி தேவுல், திரிபாதி டிம்ரி, பரினீதி சோப்ரா, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படம் உலகம் முழுவதும் 116 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா எவ்வளவு கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிக்க சம்பளமாக 6 கோடி முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறாராம். வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க 3 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த ராஷ்மிகா தற்போது இந்த அனிமல் படத்தில் நடித்ததற்காக சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம்.
முதல் நாளில் ரூ.100 கோடி தட்டிய அனிமல்! ஷாருக்கானை மிஞ்சி ரன்பீர் கபூர் மிரட்டல் சாதனை.!
இந்த அனிமல் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் நிறையவே இடம்பெற்று இருந்தது. இதற்கு முன்பு இந்த மாதிரி காட்சிகள் கொண்ட படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா பெரிதாக நடித்தது இல்லை. எனவே, முதல் முறையாக இந்த அளவிற்கு காட்சிகள் கொண்ட படத்தில் அவர் நடித்த காரணத்தால் படத்தில் நடிக்க சம்பளத்தை அதிகமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அனிமல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு(2024) ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…