Swarnamalya sad (File image)
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா. இவர் அலைபாயுதே, எங்கள் அண்ணா, அழகு நிலையம், புலிவால் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்து இருக்கிறார். இப்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்வர்ணமால்யா தன்னுடைய வாழ்வில் நடந்த கஷ்ட்டமான சம்பவங்களை கண்ணீர் விட்டு கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு சின்ன வயசிலேயே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் அந்த திருமண வாழ்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. கிட்டத்தட்ட என்னுடைய 21 வயதில் எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. விவகாரத்துக்கான காரணத்தை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இந்த விவகாரத்தால் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இதில் என்னை விட என் பெற்றோர் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் படிப்பில் கவனம். பிறகு இந்த வேதனையில் இருந்து மீள வேண்டும் என்றால் நாம் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் அப்போது தான் இதில் இருந்து விடுபடலாம் என நினைத்தேன். இந்த முறிவு மற்றும் சண்டையால், நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த சமயத்தில் எல்லாம் வாழ்க்கை என்றால் இப்படி தான் இருக்குமா? இப்படி பட்ட ஒரு வாழ்க்கையில் நாம் ஏன் வாழ வேண்டும்?என்று வெறுப்படைந்தேன்.
அந்த விஷயம் என்றாலே பயந்து நடுங்கும் ரஜினி! பிரபலம் சொன்ன சீக்ரெட்?
ஒரு கட்டத்தில் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பிறகு வேதனையில் ஒரு முறை நான் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்து இருக்கிறேன். என்னுடைய தங்கை தான் அதில் இருந்து வெளிய கொண்டு வர எனக்கு உதவினார். அவளால் என்னுடைய உடல்நிலையைப் பார்க்க முடியவில்லை. பிறகு என்னை மருத்துவரிடம் அழைத்துச்சென்றாள்.
மருத்துவர்களும் அதில் இருந்து மீண்டு வர எனக்கு சில அறிவுரைகளை கூறினார்கள். இந்த மன உளைச்சலில் இருந்து மீள இரண்டு மாதங்கள் ஆனது” என கண்ணீருடன் தனது சோக கதையை ஸ்வர்ணமால்யா பகிர்ந்து கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் கவலை வேண்டாம் எல்லா கவலையையும் விடுங்கள் என தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…