நீங்க தான் ‘மேஸ்ட்ரோ’! ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன்!

Published by
பால முருகன்

A.R.Rahman இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மனதிற்கு நெருக்கமான பல பாடல்களை கொடுத்து இசையால் நம்மளை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார். இன்பமோ, சோகமோ அவருடைய பாடல்களை கேட்டு தான் நமது நேரங்களை கழித்து வருகிறோம்.

read more- தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.!

சினிமா துறையில் இருக்கும் பல இயக்குனர்களும் ஏ.ஆர்ரஹ்மானின் பெரிய ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். அவருடைய பாடல்களை கேட்டுவிட்டு பாராட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இயக்கும் இயக்குனர் செல்வராகவன் தற்போது ரஹ்மானை ‘மேஸ்ட்ரோ’ என்று பாராட்டியுள்ளார்.

read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள  “ஆடுஜீவிதம்” படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக Periyone பாடல்  மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

அந்த பாடலை கேட்டு தான் தற்போது இயக்குனர் செல்வராகவன் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டியுள்ளார். பாடலை கேட்டுவிட்டு செல்வராகவன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அடடா எவ்வளவு அருமையான பாடல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று தான் நாங்கள் சொல்லவேண்டும். நான் மேஸ்ட்ரோ ஏ.ஆர்.ரஹ்மானின் மந்திரத்திற்கு  சரணடைகிறேன்” என கூறியுள்ளார். இவருடைய பதிவை பார்த்த பலரும் செல்வராகவன் சார் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு படம் பண்ணுங்க என கூறி வருகிறார்கள். இதுவரை பல படங்களை இயக்கி உள்ள செல்வராகவன் ஒரு படத்தில் கூட ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

நீலகிரியில் வெளுத்து ஊத்தும் கனமழை! இந்த இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும்…

2 minutes ago

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

12 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

12 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

12 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

13 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

14 hours ago