Anushka Sharma and Amitabh Bachchan [Image source : file image ]
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் செல்லவேண்டும் என்பதற்காக நபர் ஒருவரின் பைக்கில் சவாரி செய்தார். அதைபோலவே, மேலும் அனுஷ்கா ஷர்மா தனது காரைத் விட்டு சாலைத் தடையைத் தவிர்க்க பைக் சவாரியைத் தேர்ந்தெடுத்தார்.
இவர்கள் இருவரும் பைக்கில் சென்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு, இரண்டு நிகழ்வுகளிலும், நடிகர்களோ அல்லது ஓட்டுநர்களோ ஹெல்மெட் அணியவில்லை என்பதை நெட்டிசன்கள் கவனித்தனர். இந்நிலையில், இரண்டு நட்சத்திரங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்க மும்பை காவல்துறையை அணுகிய ட்விட்டர் பயனர்களுக்கு மும்பை காவல்துறையினர் பதில் அளித்துள்ளனர். ‘உண்மையில் அவர்கள் செயல்களைக் கவனித்துள்ளோம் என்று ட்வீட் செய்து, “இதை நாங்கள் போக்குவரத்துக் கிளையுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். ” என பதிவிட்டுள்ளார்கள்.
அனுஷ்கா ஷர்மா ஒரு பைக் சவாரியைத் தேர்வுசெய்த வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவியது, அதை பலர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர். வீடியோவில், ஜூஹூவில் மரம் விழுந்ததால் அனுஷ்கா தனது ஊழியரின் ஸ்கூட்டர் ஒன்றில் ஏறிச் செல்வதைக் காணலாம்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…