எப்போ பாத்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் கேள்வி! செம கடுப்பான பிரியா பவானி சங்கர்!

Published by
பால முருகன்

சென்னை : சினிமாவில் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாகவே பேசிவிடுவது உண்டு. மேலும், சிலர் பேட்டிகளில் பேட்டி கொடுக்க வரும் போது இது போன்ற கேள்விகள் கேட்டால் அதற்கு தன்னுடைய கருத்துக்களையும் தெரிவித்துவிடுவார்கள். மேலும், சிலர் இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்கவேண்டாம் என்று கோபமடைந்துவிடுவார்கள்.

அப்படி தான் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேள்விக்கு நடிகை பிரியா பவானி சங்கர் மிகவும் கடுப்பாகி இருக்கிறார். எங்கே சென்றாலும் இது போன்ற கேள்விகளை கேட்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து சென்னையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் பேசிய அவர் ” முதலில் எனக்கு இந்த மாதிரி கேள்விகளை கேட்டாலே ரொம்பவே கோபமாக வருகிறது.

நான் எந்த ஊடகத்திற்கு பேட்டி கொடுக்க சென்றாலும் என்னிடம் கேட்கும் கேள்வி உங்களிடம் யாரும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு இருக்கீறார்களா? உங்களுக்கு இந்த பிரச்சனை நடந்து இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். முதலில் இந்த கேள்வியை எதற்காக நடிகைகளிடம் கேட்கறீர்கள்? இதே கேள்வியை நடிகரிடம் கேட்பீர்களா? கண்டிப்பாக கேட்க மாட்டிங்க.

எனவே, ஒரு நடிகை கிட்ட மட்டும் எதற்காக அந்த மாதிரி கேள்வியை கேட்கிறீர்கள் என்று எனக்கு நிஜமாகவே தெரியவில்லை. அதைப்போல, நாம் எப்படி இருந்தாலும் எல்லாரும் குறை என்பது சொல்லி கொண்டே தான் இருப்பார்கள். நான் ஒரு இடத்திற்கு செல்கிறேன் என்றால் நான் போட்டிருக்கும் ட்ரஸ் சரியாக இல்லை என என்னுடைய தோழியே சொல்வார்கள்.

அவர்கள் சொல்வதை பற்றி நான் யோசித்துக்கொண்டு சரி அவர்கள் சொல்கிறார்கள் என்பதை எடுத்துக்கொள்வேன். ஆனால் அதற்காக எல்லாம் என்னை மாற்றி கொள்ளவே மாட்டேன். எனக்கு இது போன்ற விஷயங்கள் எல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி யாரும் கேட்காதீர்கள் என்கிறார் பிரியா பவானி சங்கர்.

Published by
பால முருகன்

Recent Posts

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

10 minutes ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

40 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

1 hour ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

2 hours ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

2 hours ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

3 hours ago