maya and poornima [File Image]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் செய்யும் செயல்கள் முகம் சுளிக்க வைத்து வருகிறது என்றே சொல்லவேண்டும். இதில் குறிப்பாக பூர்ணிமா அடிக்கடி பிக் பாஸ் குறித்து விமர்சித்து பேசி வருவது ரசிகர்களை கட்டுப்படைய செய்துள்ளது. நேற்று கூட பூர்ணிமா பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி விமர்சித்து பேசியிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு நடந்த சீசன்களில் எல்லாம் மிகவும் வலிமையான போட்டியாளர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவர்களுக்கு பதிலாக சும்மா சம்மந்தமே இல்லாதவர்கள் எல்லாம் பைனலில் வந்து நிற்பார்கள் என்பது போல பேசினார். அதைப்போல மாயாவும் அடிக்கடி சக போட்டியாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பூர்ணிமா, மாயா இருவருமே எப்போதும் தங்கள் இருவரும் தான் இந்த போட்டியை சரியாக விளையாடுவது போலவும் தங்களுக்குள்ளே பேசியும் வருகிறார்கள். இந்த நிலையில், இருவரும் செய்த ஒரு செய்யலை கண்டு மிகவும் கடுப்பாகி பிக் பாஸ் அவருக்குழு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
கூல் சுரேஷ் சும்மா லிப் -ஸ்டிக் போட்டு நடிச்சிட்டு இருக்காரு! கடுமையாக விமர்சித்த சுசித்ரா!
அப்படி என்ன செய்தார்கள் என்றால் இருவரும் தங்களுடைய மைக்குகளை கழற்றி வைத்துவிட்டு ஒரு ரூமிற்குள் சென்றுவிட்டு சில நிமிடங்கள் உள்ளே இருந்துவிட்டு வெளியே வந்தார்கள். வெளிய வந்தவுடன் இருவரும் முகம் கழிவுவிட்டு மேக்கப்பும் போட்டுகொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது கோபத்துடன் பிக் பாஸ் மாயா உங்களுடைய மைக்கை மாட்டுங்கள் மைக்கை மாட்டுங்கள் என இரண்டு முறை கூறியது. இதனை பார்த்த பூர்ணிமா சிரித்துக்கொண்டிருந்த நிலையில், அவரையும் மைக்கை மாட்ட சொல்லி பிக் பாஸ் எச்சரித்தது. இதுவரை இல்லாத வகையில், நேற்று அவர்களை எச்சரிக்கும் போது மிகவும் கோபத்துடன் பிக் பாஸ் பேசியது.
ஏற்கனவே, சரியாத மரியாதை கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு பிரதீப் ஆண்டனி மீது எழுந்த நிலையில், அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வீட்டை விட்டு பிக் பாஸ் வெளியே அனுப்பியது. தற்போது அவரை தொடர்ந்து பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் செய்து வரும் செயலால் ரசிகர்கள் இவர்களுக்கும் ரெட் கார்ட் கொடுங்க என்பது போல கூறி வருகிறார்கள்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…