பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. இவர் நேற்று இரவு படப்பிடிப்பு முடித்து விட்டு, இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஈவிபி பிலிம் சிட்டியில் உள்ள ஹோட்டல் ரூமுக்கு வந்துள்ளார். அந்த ரூமில் தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் ஒன்றாக தங்கி இருந்துள்ளார்.
இதனையடுத்து, சித்ரா ஹேமந்த்திடம் தான் குளிக்க செல்வதாகக் கூறி, ரூமிற்கு வெளியே செல்ல சொல்லியுள்ளார். வெகு நேரமானதால் அறையின் கதவை தட்டி பார்த்துள்ளார். கதவை திறக்காததால், ஹோட்டல் ஊழியரிடம் சொல்லியுள்ளார். இந்நிலையில், ஹோட்டல் ஊழியர், மாற்று சாவி எடுத்து வந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மரணம் அவரது ரசிக பெருமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…