சினிமா

நினைச்சு கூட பார்க்க முடியல! மார்பிங் வீடியோவால் வருத்தத்தில் நடிகை ராஷ்மிகா!

Published by
பால முருகன்

ராஷ்மிகா பற்றிய போலியான வீடியோ ஒன்று வைரலாக பரவி கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அவரே பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார்.

மார்பீங் வீடியோ

நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை மார்பிங் செய்து AI தொழில் நுட்பம் மூலம் பரவி வந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு லிப்டில் இப்படியா உடை அணிந்துகொண்டு வருவீர்கள் ராஷ்மிகா என்பது போல விமர்சித்து வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் இது போலியான மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று தெரியாமல் இருந்த நிலையில், சிலர் அது மார்பிங் செய்ய பட்ட வீடியோ என கூற ராஷ்மிகாவின் பெயர் அப்படியே ட்ரெண்ட் ஆக தொடங்கிவிட்டது.

கொந்தளித்த அமிதாப்பச்சன்

கவர்ச்சியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்! நடிகை ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு?

ராஷ்மிகாவின் பெயர் ட்ரெண்ட் ஆனவுடன் என்ன பிரச்சனை என்று கவனித்த நடிகர் அமிதாப் பச்சன் “இது முற்றிலும் மார்பீங் செய்யப்பட்ட வீடியோ இப்படியான ஒரு வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மிகவும் கோபத்துடன் கூறியிருந்தார். இவர் இப்படி கூறியவுடன் ரசிகர்கள் பலரும் ராஷ்மிகா பற்றி இப்படியான வீடியோவை எடிட் செய்தவருக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ராஷ்மிகா வருத்தம்

மார்பீங் வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா வருத்தத்துடன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். அதில் ” ஆன்லைனில் பரப்பப்படும் அந்த மார்பீங் வீடியோவைப் பற்றி பேசிய ஆகவேண்டும். இதனை பற்றி பேசும்போதே எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு தொழில் நுட்பம் இப்படியான விஷயத்தில் தவறாக பயன்படுத்தியது குறித்து மிகவும் வேதனையாக இருக்கிறது.

இன்று நான் ஒரு நடிகையாக இருந்ததால் என்னால் இந்த பிரச்சனையை இப்போது சமாளித்து விட முடிகிறது. இதுவே நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது இப்படியானால் நடந்திருந்தால் என்னால் எப்படி சமாளித்து இருக்க முடியும் இரு கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த மாதிரி முகம் மற்றும் தொழில் நுட்பத்தால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன்பு இதனை பற்றி மற்றவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும்” எனவும் நடிகை ராஷ்மிகா வருத்தத்துடன் கூறியுள்ளார்.

 

Published by
பால முருகன்

Recent Posts

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

10 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

14 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

25 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

50 minutes ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

1 hour ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago