சினிமா

நினைச்சு கூட பார்க்க முடியல! மார்பிங் வீடியோவால் வருத்தத்தில் நடிகை ராஷ்மிகா!

Published by
பால முருகன்

ராஷ்மிகா பற்றிய போலியான வீடியோ ஒன்று வைரலாக பரவி கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அவரே பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார்.

மார்பீங் வீடியோ

நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை மார்பிங் செய்து AI தொழில் நுட்பம் மூலம் பரவி வந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு லிப்டில் இப்படியா உடை அணிந்துகொண்டு வருவீர்கள் ராஷ்மிகா என்பது போல விமர்சித்து வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் இது போலியான மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று தெரியாமல் இருந்த நிலையில், சிலர் அது மார்பிங் செய்ய பட்ட வீடியோ என கூற ராஷ்மிகாவின் பெயர் அப்படியே ட்ரெண்ட் ஆக தொடங்கிவிட்டது.

கொந்தளித்த அமிதாப்பச்சன்

கவர்ச்சியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்! நடிகை ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு?

ராஷ்மிகாவின் பெயர் ட்ரெண்ட் ஆனவுடன் என்ன பிரச்சனை என்று கவனித்த நடிகர் அமிதாப் பச்சன் “இது முற்றிலும் மார்பீங் செய்யப்பட்ட வீடியோ இப்படியான ஒரு வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மிகவும் கோபத்துடன் கூறியிருந்தார். இவர் இப்படி கூறியவுடன் ரசிகர்கள் பலரும் ராஷ்மிகா பற்றி இப்படியான வீடியோவை எடிட் செய்தவருக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ராஷ்மிகா வருத்தம்

மார்பீங் வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா வருத்தத்துடன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். அதில் ” ஆன்லைனில் பரப்பப்படும் அந்த மார்பீங் வீடியோவைப் பற்றி பேசிய ஆகவேண்டும். இதனை பற்றி பேசும்போதே எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு தொழில் நுட்பம் இப்படியான விஷயத்தில் தவறாக பயன்படுத்தியது குறித்து மிகவும் வேதனையாக இருக்கிறது.

இன்று நான் ஒரு நடிகையாக இருந்ததால் என்னால் இந்த பிரச்சனையை இப்போது சமாளித்து விட முடிகிறது. இதுவே நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது இப்படியானால் நடந்திருந்தால் என்னால் எப்படி சமாளித்து இருக்க முடியும் இரு கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த மாதிரி முகம் மற்றும் தொழில் நுட்பத்தால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன்பு இதனை பற்றி மற்றவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும்” எனவும் நடிகை ராஷ்மிகா வருத்தத்துடன் கூறியுள்ளார்.

 

Published by
பால முருகன்

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

1 hour ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

2 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

3 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

3 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 hours ago