கேப்டன் விஜயகாந்த் கிட்ட அன்பு சண்டை போட்ட வடிவுக்கரசி!

Published by
பால முருகன்

Vijayakanth : கேப்டன் விஜயகாந்துடன் நடிகை வடிவுக்கரசி அன்பு சண்டைபோட்டுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் அவரை வைத்து படங்களை இயக்க இயக்குனர்களும், படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும் விருப்ப படுவது உண்டு. அப்படியான பலருக்கும் விஜயகாந்த் வாய்ப்புகள் கொடுத்து பெரிய ஆளாகவும் ஆக்கி இருக்கிறார். விஜயகாந்தை வைத்து படங்களை தயாரித்ததில் பிரபல நடிகையான வடிவுக்கரசியும் இருக்கிறார்.

விஜயகாந்தை வைத்து வடிவுக்கரசி இந்த படம் எடுக்கப்படுவதற்கு முன்பு வடிவுக்கரசி விஜயகாந்திடம் வாய்ப்பு கேட்கவே தயங்கினாராம்.  வடிவுக்கரசி விஜயகாந்த் உடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இந்த சமயத்தில் விஜயகாந்த்தை சந்தித்து நான் ஒரு படத்தை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன் என்று கூறினாராம்.

இந்த முடிவுக்கு விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு நல்லது தான் யாரையாவது வைத்து தயாரிங்கள் என்று கூறினாராம். அதற்கு வடிவுக்கரசி படத்தில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள் என்று விஜயகாந்த் இடம் கேட்டரும். விஜயகாந்த் அதற்கு மைக் மோகன் நல்ல பீக்கில் இருக்கிறார். அவரை வைத்து படம் தயாரிங்கள் கண்டிப்பாக நன்றாக செல்லும் அவரை வைத்து படத்தின் பூஜை போட்டாலே சில இடங்களில் விற்பனையாகி விடும்.

வேண்டுமென்றால் அவரை வைத்து நீங்கள் படம் எடுங்கள் என்று கூறினாராம். இதனை கேட்ட வடிவுக்கரசி நான் ஏற்கனவே மோகனிடம் பேசினேன் அவர் வேறு வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படம் அவரால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகு விஜயகாந்த் வேறு ஒரு நடிகர் பெயரை சொன்னாராம். இதனால் கடுப்பான வடிவுக்கரசி இவ்வளவு நடிகர்கள் பெயரை சொல்கிறீர்கள் நானே உங்களுடைய படத்தின் நடிக்கிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்களா என்று சண்டைபோட்டாராம்.

அதற்கு விஜயகாந்த் நான் படம் தயாரிக்கிறேன் நீங்கள் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நீங்க சொல்லி இருக்கலாமே என்று அன்பு சண்டை போட்டுக் கொண்டார்களாம். அதன் பிறகு தான் கேப்டன் விஜயகாந்த் வடிவுக்கரசி தயாரிப்பில் அன்னை என் தெய்வம் படத்தில் நடித்து கொடுத்தாராம். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வெற்றியை பெற்றது.

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

6 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

6 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

7 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

8 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

8 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

8 hours ago