திரைப்பிரபலங்கள்

#BREAKING : நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
பால முருகன்

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வந்தது.  பிறகு கடந்த மாதம் ஜாமினில் ஹேம்நாத்  வெளியேவந்தார்.

மேலும் , இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   நீண்ட நாட்களாக சித்ராவின் தற்கொலை வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் விரைவாக வழக்கை முடிக்கவேண்டும் எனவும்,  விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருவதாகவும் சித்ராவின் தந்தை வழக்கை சென்னைக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.

மாற்றப்பட்ட அந்த வழக்கை விரைவாக விசாரிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், காவல்துறை தரப்பில் இன்னும் 64 சாட்சிகள் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான காரணங்களுக்காக தான் வழக்கை முடிக்க தாமதமாகிறது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில்  சித்ராவின் தற்கொலை வழக்கு இன்னும் 6 மாதங்களில் முடிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறந்துள்ளது. வழக்கை சென்னைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை நிகாரித்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

49 minutes ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

1 hour ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

2 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

3 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

3 hours ago