திரைப்பிரபலங்கள்

#BREAKING : நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
பால முருகன்

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வந்தது.  பிறகு கடந்த மாதம் ஜாமினில் ஹேம்நாத்  வெளியேவந்தார்.

மேலும் , இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   நீண்ட நாட்களாக சித்ராவின் தற்கொலை வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் விரைவாக வழக்கை முடிக்கவேண்டும் எனவும்,  விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருவதாகவும் சித்ராவின் தந்தை வழக்கை சென்னைக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.

மாற்றப்பட்ட அந்த வழக்கை விரைவாக விசாரிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், காவல்துறை தரப்பில் இன்னும் 64 சாட்சிகள் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான காரணங்களுக்காக தான் வழக்கை முடிக்க தாமதமாகிறது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில்  சித்ராவின் தற்கொலை வழக்கு இன்னும் 6 மாதங்களில் முடிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறந்துள்ளது. வழக்கை சென்னைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை நிகாரித்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

5 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

6 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

6 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

7 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

7 hours ago