Rashmika Mandanna [Image Source : Twitter/File Image]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது நீண்ட நாள் மேலாளரை வேலையில் இருந்து திடீரென நீக்கியுள்ளார். அனுபவம் வாய்ந்த மேலாளர் ஒருவர் நடிகை ராஷ்மிகாவை ஏமாற்றிய செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கன்னடப் படங்களில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு சினிமாவில் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா. சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் சுமார் ரூ.80 லட்சம் அளவுக்கு அவரது மேலாளர் மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அவரது நீண்ட கால மேனேஜரை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா வளர்ந்து வரும் நடிகையாக இருந்த காலத்திலிருந்தே அவருக்கும் அதே மேலாளர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால். சமீபகாலமாக அந்த நபர் ராஷ்மிகாவிடம் இருந்து கிட்டத்தட்ட 80 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இந்நிலையில், அந்த நபரை சத்தமில்லாமல் நீக்கிவிட்டு இப்போது தானே தனது தேதிகளை கவனித்து வருகிறாராம்.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…