மருத்துவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் இறங்கிய பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள், செவிலியர்கள் காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் வெளியில் இறங்கி தங்களது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டுவருகிறார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 3,500 பேருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கருவிகளை வழங்கியிருக்கிறார்.
மேலும் இவர் மருத்துவர்களுக்காக நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வரும் நிலையில், இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘எங்கள் மருத்துவ ஊழியர்களுக்காக முழு உடல் பாதுகாப்பு கவசத்தை நன்கொடையாக அளித்து வருகிறேன். மேலும் இந்தியா முழுவதும் டாக்டர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் உடனடியாக தேவைப்படும் முழு கவச உடைகளுக்காக நன்கொடை திரட்ட முடிவு செய்து இருக்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…