சினிமா

மாநாடு படம் வெளியாகும் போது நடந்த சம்பவங்கள்! கண்கலங்கிய கூல் சுரேஷ்!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ் சிம்புவின் மாநாடு படத்தின் போது ‘சிம்புவின் மாநாடு எல்லாரும் வழியைவிடு” என்ற வசனத்தை பேசியது மூலம் தான் பிரபலமானார். அதன் பிறகு எந்த படங்கள் வெளியானாலும் முதல் ஆளாக திரையரங்கிற்கு சென்று அங்கு அந்த படங்களை பற்றி பெருமையாக பேசி யூடியூப் ஸ்டார் என்ற பெயரையும் வாங்கினார்.

அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்க அதில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த கஷ்ட்டமான சம்பவங்களை பற்றி மனம் திறந்து மக்களுக்கு தெரிவிக்கலாம் என டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தது.

விருப்பமே இல்லை பணத்துக்காக அதையெல்லாம் ஒப்புக்கொண்டேன்! தமன்னா காதலர் வேதனை! 

அப்போது பேசிய கூல் சுரேஷ் ” சிலம்பரசன் நடித்த மாநாடு படம் முன்னதாக வெளியாவதாக இருந்து சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை என கடைசி நேரத்தில் அறிவிப்பு வந்தது. ஒரு ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் படங்கள் ரிலீஸ் ஆவதாக கூறி படம் வெளியாகாமல் இருந்துவிட்டால் எந்த அளவிற்கு பேசும்பொருள் ஆகுமோ அதே அளவுக்கு மாநாடு படம் வெளியாவதால் பெரிய பேச்சு எழுந்தது.

அந்த சமயம் பார்த்து என்னுடைய பெயரில் விஷ கிருமி ஒருவர் சமூக வலைத்தளத்தில் கணக்கு ரெடி செய்து சிம்புவை பற்றி தப்பு தப்பாக பதிவுகளை வெளியீட்டு வந்தார். நான் சிம்பு கூட நெருக்கமாக இருந்தவன் என்பதால் நான் சொன்னால் நம்புவார்கள் என்ற காரணத்தால் அந்த விஷ கிருமி அப்படி சிம்புவை பற்றி பதிவிட்டு இருந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் நான் தான் இப்படி செய்கிறேன் என்றே பலரும் நம்பி விட்டார்கள். பிறகு என்னை தேடி சிம்பு ரசிகர்கள் வீட்டிற்கும் வந்துவிட்டார்கள். பின் போலீசில் சொல்லி எனக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. அதன் பின் மாநாடு படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆக போவதாக அறிவிப்பு வெளியானது நான் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றுவிட்டேன்.

அதன் பின் மீண்டும் படம் ரிலீஸ் ஆகாது என்பது போல ஒரு செய்தி வெளியானது. பிறகு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் எல்லாரும் நான் தான் என்னால் தான் இந்த மாதிரி படத்திற்கு பிரச்சனை என்று முறைக்க ஆரம்பித்து பேச தொடங்கிவிட்டார்கள். பிறகு திரையரங்கின் வாசலுக்கு சென்று நான் இல்லை அது என்னுடைய பெயரில் இருக்கும் போலியான கணக்கு என்று சொல்லி புரிய வைத்தேன்.

பின் படம் ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பு வந்தது மழையும் பெய்தது. அந்த நேரம் தான் என்னுடைய தலைவன் படம் ரிலீஸ் ஆகிறது கடவுளே சந்தோசப்பட்டுவிட்டார் அதனால் மழை வருகிறது என கூறினேன். அதில் இருந்து நான் எல்லா படங்கள் வெளியாகும் போதும் போய் படத்தை பற்றி பேசினேன். அதன் பிறகு எனக்கு நிறைய பேட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் கிடைத்தது.

படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்?

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு முக்கிய காரணமே எனக்கு ஏதாவது நல்ல விஷயம் நடக்காத பட வாய்ப்புகளுக்காக மட்டும் இல்லை எதாவது தொழில் செய்யும் தொழிலதிபர்கள் எனக்கு வாய்ப்பு தரமாட்டார்களா என்றும் தான்” என கண்கலங்கி பேசியுள்ளார். இதைப்போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு விசித்ரா தனக்கு நடந்த அட்ஜெஸ்மென்ட் விஷயம் பற்றி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

5 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

6 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago